Jul 6, 2026
Thisaigal NewsYouTube
காரணம் கோரும் கடிதம் வெளியிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

காரணம் கோரும் கடிதம் வெளியிடப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஜூன்.10-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமாக அமைந்த பேருந்தை வழிநடத்திய நிறுவனத்திற்குத் தரை பொது போக்குவரத்து அமலாக்க ஆணையமான அபாட் ( APAD ), காரணம் கோரும் கடிதத்தை வெளியிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலையில் கிழக்கு மேற்கு சாலையான ஜெலி-கெரிக் சாலையின் 53 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த அந்த பேருந்தை வழிநடத்திய நிறுவனம், வாகனப் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளதா? என்ற தணிக்கை சோதனைக்கு இலக்கிடப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனை நடைபெறும். மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் பலி கொண்ட இந்த பேரிடரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தவறு இழைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.

Related News

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

ஜோகூர் பாருவில்  உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான்  வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் பாருவில் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு: பக்காத்தான் வேட்பாளர்கள் ஐந்து பேர் உறுதி

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!

ஜோகூர் தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பான் வென்றால் சீனப் புதிய கிராமங்களை டிஏபி பொறுப்பேற்கும்: ங்கா கோர் மிங் உறுதி!