Mar 28, 2026
Thisaigal NewsYouTube
53 வயது காப்புறுதி முகவரான பெண் கைது
தற்போதைய செய்திகள்

53 வயது காப்புறுதி முகவரான பெண் கைது

Share:

மலாக்கா, ஜூன்.02-

கடந்த மார்ச் மாதம் ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டதுடன், அந்த ஆசிரியையை மிரட்டி வந்ததாக நம்பப்படும் 53 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதுடைய அந்த ஆசிரியை செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து காப்புறுதி முகவரான அந்த பெண் நேற்றிரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலாக்கா, கிளேபாங்கைச் சேர்ந்த அந்த ஆசிரியையின் தந்தை ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளார். அந்தக் கடிதத்தில் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் தனது மகள் மற்றும் மருமகனின் நிர்வாணக் கோலப் புகைப்படம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் அந்த ஆசிரியைக்கு அந்தப் பெண் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்ததாக நம்பப்படுகிறது.

நான்கு பிள்ளைகளுக்குத் தாயாரான அந்த மாது, இன்று காலையில் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, இரண்டு நாள் தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி