கடந்த 2017-ஆம் ஆண்டு அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையில் பிறந்தபோது ஏற்பட்ட மருத்துவக் குறைபாட்டினால், மூளை பாதிப்புக்குள்ளான 9 வயது சிறுமிக்கு 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மருத்துவ அலட்சியம் தொடர்பாக அரசுத் தரப்பு தனது பொறுப்பை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி ஐமி ஜைனி அஷார் அய்மி சைனி அஷார் இந்தத் தீர்ப்பை வழங்கினார். சிறுமியின் தற்போதைய நிலை நிரந்தரமானது என்றும், அன்றாடத் தேவைகளுக்கு அவர் மற்றவர்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மொத்தம் 25 லட்சத்து 48 ஆயிரத்து 850 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை சிறுமியின் பெற்றோர்கள் கூட்டாக நிர்வகிக்கும் அறக்கட்டளையில் வைப்புச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது வெற்றிடப் பிரித்தெடுத்தல் முறையில் ஏற்பட்ட சிக்கலால் அந்தச் சிறுமிக்குக் கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.








