கோலாலம்பூர், மே.10-
மலேசியாவின் எல்லை நுழைவாயில்களில் கடந்த 2024 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரை நடத்தப்பட்ட சோதனையில், அண்டை நாடுகளிலிருந்து திரும்பிய 1,084 மலேசியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Methamphetamine, Ketamine ஆகிய போதைப்பொருட்களைப் பயன்படுத்தியவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையின் இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் போதும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ள அவர், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.








