ஜார்ஜ்டவுன், ஜூன்.04-
பினாங்கைச் சேர்ந்த 46 வயது நபர், அண்மையில் ஓன்லைன் ஸ்கேம் மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பான 13 லட்சத்து 16 ஆயிரத்து 111 ரிங்கிட்டைப் பறி கொடுத்துள்ளார்.
மருத்துவ நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றி வரும் அந்நபர், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக பினாங்கு குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரத்தை நம்பி அவர் மோசம் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை மோசடி செய்த கும்பலில், பெண் ஒருவர் முக்கியப் பங்காற்றியள்ளதாக அந்த நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அஹ்மாட் தெரிவித்தார்.








