கூலாய், மே.10-
சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டாலோ அல்லது பதிவுகள் நீக்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டவர்கள் 'தொடர்பு, பல்லூடக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில்' விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் தொடர்புத் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பாயம் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இயங்குவதால், மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் தலையீடின்றி ஒரு சார்பற்ற முறையில் விசாரணைகள் நடைபெறும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இத்தகையப் பிரச்சனைகளுக்கு முறையான இந்தத் தளத்தைப் பயன்படுத்தித் தீர்வு காண முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








