ஊழியர் சேமநிதி வாரியமான ஈ.பி.எஃப், ஓய்வூதியக் கால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில்,ஐ-லெகாசி, ஐ-ஏமாஸ் மற்றும் ஓய்வூதிய இலக்கு கால்குலேட்டர் ஆகிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக, ஐ-லெகாசி வசதியின் மூலம் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சந்தாதாரர்கள், தங்களின் சேமிப்பில் ஒரு பகுதியைத் தங்கள் மனைவி அல்லது பிள்ளைகளின் ஈ.பி.எஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். எனினும், இந்த மாற்றம் போதுமான சேமிப்பு அளவிற்கும் மேலாக உள்ள தொகைக்கு மட்டுமே பொருந்தும்.
ஆயுட்காலம் அதிகரித்து வரும் சூழலில், உறுப்பினர்கள் தங்களின் சேமிப்பைச் சரியாக நிர்வகிக்கவும், வருங்கால சந்ததியினருக்கு ஒரு வாழ்வாதாரத்தை விட்டுச் செல்லவும் இந்த முன்னெடுப்புகள் உதவும் என ஈ.பி.எஃப் தலைமைச் செயல் அதிகாரி அகமட் சுல்கர்னைன் ஓன் தெரிவித்துள்ளார்.








