Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயம்

Share:

பாங்கி, ஜூன்.05-

தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்ததில் 33 அந்நிய நாட்டவர்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று காலை 6.50 மணியளவில் பண்டார் பாரு பாங்கி, செக்‌ஷென் 13, ஜாலான் P/6 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பாக காலை 6.59 மணிக்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாங்கி மற்றம் காஜாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து விரைந்த 13 வீரர்கள், கவிழ்ந்து கிடந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காயமுற்றவர்களில் எண்மர் காஜாங் மற்றும் செர்டாங் ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் எஞ்சியவர்கள், சம்பவ இடத்திலேயே சுகாதார அமைச்சின் அம்புலன்ஸ் பணியாளர்களால் அவசர சிகிச்சை பெற்றனர் என்று அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் 11 பேர் எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்