May 20, 2026
Thisaigal NewsYouTube
ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

Share:

மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சி முறை மற்றும் ருக்குன் நெகாரா குறித்து முகநூலில் கருத்து வெளியிட்ட முன்னாள் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவருக்கு எதிராக நாடு முழுவதும் 28 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இத்ரிஸ் ஷா, பன்றி வளர்ப்புத் தடை விவகாரம் தொடர்பாகத் தலைவர்கள் ருக்குன் நெகாராவை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஆட்சியாளரின் அதிகாரம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது மட்டுமே என்று டோனி புவா முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடுதல் மற்றும் கட்டமைப்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய சட்டங்களின் கீழ் புக்கிட் அமான் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.

Related News