Mar 28, 2026
Thisaigal NewsYouTube
75.8 கோடி ரிங்கிட் சொத்துக்கள் முடக்கம், அது பழிவாங்கும் நடவடிக்கையாகும்
தற்போதைய செய்திகள்

75.8 கோடி ரிங்கிட் சொத்துக்கள் முடக்கம், அது பழிவாங்கும் நடவடிக்கையாகும்

Share:

புத்ராஜெயா, ஜூன்.05-

வெளிநாட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான 75.8 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை முடக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் நடவடிக்கையானது, பழி வாங்கும் செயலாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் துணைவியார் நயிமா காலிட் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தங்களின் அனைத்து சொத்துக்களும் சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டவையாகும். அந்த சொத்துக்கள் தங்களிடமிருந்து பறி போவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தக்க நடவடிக்கை எடுப்போம் என்று நயிமா காலிட் சூளுரைத்துள்ளார்.

அரசியல் தூண்டுதலின் பேரிலும், பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடனும், சட்டத்திற்கு புறம்பான முறையில் சொத்து முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வர்ணித்துள்ளார்.

எஸ்பிஆர்எம், தன்மூப்பான முறையில் தங்களின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

75.8 கோடி ரிங்கிட் சொத்துக்கள் முடக்கம், அது பழிவாங்கும் ... | Thisaigal News