புத்ராஜெயா, ஜூன்.05-
வெளிநாட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான 75.8 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை முடக்கியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் நடவடிக்கையானது, பழி வாங்கும் செயலாகும் என்று முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஸைனுடினின் துணைவியார் நயிமா காலிட் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ள தங்களின் அனைத்து சொத்துக்களும் சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டவையாகும். அந்த சொத்துக்கள் தங்களிடமிருந்து பறி போவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தக்க நடவடிக்கை எடுப்போம் என்று நயிமா காலிட் சூளுரைத்துள்ளார்.
அரசியல் தூண்டுதலின் பேரிலும், பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்துடனும், சட்டத்திற்கு புறம்பான முறையில் சொத்து முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் வர்ணித்துள்ளார்.
எஸ்பிஆர்எம், தன்மூப்பான முறையில் தங்களின் சொத்துக்களை முடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








