Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்துடன் பேருந்து மோதல்: உப்சி பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனத்துடன் பேருந்து மோதல்: உப்சி பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் உட்பட 15 பேர் பலி

Share:

கெரிக், ஜூன்.09-

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழமான தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ், உப்சி உயர்க்கல்விக் கூடத்தின் பேருந்து விபத்துக்குள்ளானதில், அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள், பேருந்து ஓட்டுனர் என 15 பேர் உயிரிழந்தனர்.

இத்துயரச் சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் கிழக்கு, மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக், பனுன் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

அல்ஸா, எம்பிவி வாகனத்துடன் மோதி, அந்த பேருந்து கவிழ்ந்ததில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 மாணவர்களும், பேருந்தைச் செலுத்திய அதன் ஓட்டுநரும் உயிரிழந்ததாக உலு பேராக், பொது தற்காப்புப் படை மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த பேருந்தில் உயிரிழந்த 14 மாணவர்கள் உட்பட 48 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது.

அந்த பல்கலைக்கழக பேருந்து, திரெங்கானு, ஜெர்தேவிலிருந்து தங்சோங் மாலிமை நோக்கி வந்து கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்