May 21, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது - பிரதமர் உறுதி
தற்போதைய செய்திகள்

நாட்டில் எரிபொருள் விநியோகம் சீராக உள்ளது - பிரதமர் உறுதி

Share:

பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தற்போது மிகவும் சீராகவும், சிறப்பாகவும் கையாளப்பட்டு வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தேவைப்படும்போது எரிபொருளை இறக்குமதி செய்வது உட்படப் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக, டீசல் கடத்தல் மற்றும் கசிவுகளைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், உள்நாட்டு எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளதோடு விநியோகத் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த நெருக்கடியான நிலை இப்போது இல்லை என உறுதிபடத் தெரிவித்த பிரதமர், உலகளாவிய எரிசக்தி விலை மாற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஆசியான் நாடுகளுடனான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்படும் என்றார்.

Related News