பிறை, ஜூன்.03-
டெங்கர் லோரி ஒன்று, சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் அதன் டாங்கியில் துவாரம் ஏற்பட்டு சுமார் 500 லிட்டர் செம்பனை எண்ணெய் சாலையில் கசிந்தது.
இச்சம்பவம் இன்று காலை 11.50 மணியளவில் பினாங்கு, பிறை, ஜுரு டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது. இது தொடர்பாக தீயணைப்பு, மீட்புப் படையினர் காலை 11.59 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றனர்.
சாலையில் வழிந்தோடிய செம்பனை எண்ணெயினால் அந்தச் சாலையின் பிரதான தடம், அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டது.
சாலையைச் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.








