புத்ராஜெயா, ஜூன்.04-
வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் கார்கள், மலேசியாவுக்குள் வாகன நுழைவு அனுமதியான விஇபி இன்றி நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஇபி இன்றி மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் கார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
விஇபி கட்டமைப்பில் பதிவு செய்ய வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார். விஇபி இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.








