Mar 28, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தான் உடல் நிலை தேறினார்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தான் உடல் நிலை தேறினார்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது, ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா, உடல் நலம் தேறியுள்ளார்.

புருணை சுல்தானை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவும் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தனர்.

புருணை சுல்தானின் உடல் நலம் தேறியுள்ளதால், அவர் ஐஜேஎன்னை விட்டு நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புருணை சுல்தான் தற்போது நலமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் நீண்ட கால ஆட்சியாளர் என்று வர்ணிக்கப்படும் 78 வயது புருணை சுல்தான் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார். உடல் அசதி காரணமாக அவர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், அவர் ஐஜேஎன்னில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி