Jul 6, 2026
Thisaigal NewsYouTube
இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது
தற்போதைய செய்திகள்

இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது

Share:

சுபாங் ஜெயா, ஜூன்.06-

தனது இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல், அவர்களைப் பட்டினிப் போட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததாக நம்பப்படும் அந்தப் பிள்ளைகளின் தாயாரையும், காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சுபாங் ஜெயா, பூச்சோங்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக நல இலாகாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இருவரும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளையில் தங்களுடன் தங்கியிருந்த 4 மற்றும் 16 வயதுடைய இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல் அவ்விருவரையும் வாட்டி வதைத்து வந்ததாக நம்பப்படுகிறது.

அவ்விருவரிடம் நடத்தப்பட்ட சோனையில் அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் பழைய 8 குற்றப்பதிவுகளை அவர் கொண்டு இருப்பதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்