Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது
தற்போதைய செய்திகள்

இரு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படாமல் பட்டினிப் போட்டு கொடுமை: தாயாரும் அவரின் காதலனும் கைது

Share:

சுபாங் ஜெயா, ஜூன்.06-

தனது இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல், அவர்களைப் பட்டினிப் போட்டுக் கொடுமைப்படுத்தி வந்ததாக நம்பப்படும் அந்தப் பிள்ளைகளின் தாயாரையும், காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சுபாங் ஜெயா, பூச்சோங்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் சமூக நல இலாகாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இருவரும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

37 வயது மாதுவும், அவரின் 42 வயது காதலனும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளையில் தங்களுடன் தங்கியிருந்த 4 மற்றும் 16 வயதுடைய இரு பெண் பிள்ளைகளுக்கு உணவு எதுவும் தரப்படாமல் அவ்விருவரையும் வாட்டி வதைத்து வந்ததாக நம்பப்படுகிறது.

அவ்விருவரிடம் நடத்தப்பட்ட சோனையில் அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் பழைய 8 குற்றப்பதிவுகளை அவர் கொண்டு இருப்பதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி