Mar 28, 2026
Thisaigal NewsYouTube
விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்தது
தற்போதைய செய்திகள்

விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் விழுந்தது

Share:

தாப்பா, ஜூன்.03-

25 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 342.2 ஆவது கிலோ மீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.

25 பயணிகளில் மூவர் காயமுற்றனர். நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனமோட்டிகள் உதவி செய்ததால் அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.

அந்த பேருந்து கோலாலம்பூர் திபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து பினாங்கை நோக்கி சென்று கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமுற்ற மூன்று பயணிகள் சிலிம் ரீவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி