May 21, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு: 300 ரிங்கிட் பூடி மடானி டீசல் மானியத்தை அரசு தொடரும்
தற்போதைய செய்திகள்

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு: 300 ரிங்கிட் பூடி மடானி டீசல் மானியத்தை அரசு தொடரும்

Share:

உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்க, தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதம் 300 ரிங்கிட் பூடி மடானி டீசல் மானியமும் கூடுதல் இடைக்கால உதவியாக 100 ரிங்கிட்டும் தொடர்ந்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 300 ரிங்கிட் என்ற அளவில் நெல் சாகுபடி ஊக்கத்தொகையையும் அரசு வழங்கத் தொடங்கியுள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நாசிர் தெரிவித்துள்ளார்.

மேலும், டீசல் மானியக் கசிவுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதுடன், எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தித் துறைக்கும் சிறு, குறு தொழில்களுக்கும் தேவையான நிதி உதவிகளையும் அரசு உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News