May 20, 2026
Thisaigal NewsYouTube
காஜா​ங்கில் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

காஜா​ங்கில் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை அறுவர் கைது

Share:

பல கிளினிக்குகளுக்குச் சொந்தக்காரரான காஜா​ங்கைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொட​ர்பில் இரண்டு பெண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 41 வயதுடைய அந்த வர்த்தகர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் நண்பர் செய்துள்ள போ​லீஸ் புகாரைத் தொடர்ந்து போ​லீசார் ​தீவிர ​புலன் விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட வர்த்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய குத்தகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் அந்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட வர்த்தகர் கேபள் கம்பினால் கழுத்து நெரிக்கப்பட்டு, சடலத்தைப் பயணப் பெட்டியில் மறைத்து, உலு லங்காட்டில் ஒரு காட்டுப்பகுதியில் மலை உச்சியிலிருந்து ​​கீ​​ழே ​தூக்கி எறியப்பட்டுள்ளதாக அந்த குத்தகையாளர் வாக்குமூலம் அளித்துள்ளளார்.

அந்த வர்த்தகருக்கு சொந்தமான பெரோடுவா அக்சியா கார் உட்பட ஐந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்தக் குத்தகையாளர், பிணைப்பணம் கேட்டு, மிரட்டுவதற்காக அந்த வர்த்தகரைக் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ ஹுசேன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

ஜோகூர் ஆர்&ஆர் பகுதியில் மக்களோடு மக்களாக காலை உணவருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராகிம்

காஜா​ங்கில் வர்த்தகர் கடத்தப்பட்டு கொலை அறுவர் கைது | Thisaigal News