பிடோர் சிறப்பு அகதிகள் புகலிடம் கோருபவர் மையத்தின் மேலாண்மை குறித்த விரிவான அறிக்கையை அடுத்த மாதம் ஜூன் இரண்டாம் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் திட்டமிட்டுள்ளார்.
நாட்டின் அகதிகள் மேலாண்மை அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்தைப் பற்றி, தேசியப் பொருளாதாரச் செயல் மன்றக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அகதிகளுக்கும் புகலிடம் கோருபவர்களுக்கான புதிய பதிவு ஆவணத் திட்டம், நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்காமல் அவர்களை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, மாந்தநேய முறையில் நிர்வகிக்கும் ஒரு பொறிமுறையாகச் செயல்படும் என்று அமைச்சர் விளக்கினார்.








