ஆடவர் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக மூன்று பேர் மீது தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட நபர் தனது நட்பு வட்டத்தை சந்திப்பதற்காக தனது நண்பருடன் சென்றபோது, முகமூடி அணிந்த நபர்கள் அவரைத் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியதில், அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தங்காக், சுங்கை மாத்தியில் உள்ள புக்கிட் காங்கார் பகுதியில் நிகழ்ந்தது. 38 வயது தோங் வீ ஷெங் என்பவரின் மரணத்திற்கு காரணமாகக் கருதப்படும் மூவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் ஒருவர் குண்டர் கும்பல் ஒன்றில் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், வழக்கு விசாரணை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








