ஹரி ராயா பொருநாளின் விடுமுறைக்குப் பிறகு, பள்ளி அமர்வுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட வேளையில், இன்னும் அதிகமான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது வருத்தத்தை அளிப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை, ஜொகூர், மாசாய், தாமான் மோலேக்கில் உள்ள பள்ளிப் பகுதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெரும்பாலான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் எழும் என்ற அச்சத்தின் காரணமாக, முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என்றாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முகக்கவசம் அணிவது அவசியமாகும் என்று கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, கல்வி அமைச்சு பரிந்துரைச்செய்தது.
அதே வேளையில், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கை போன்ற கூட்ட நெரிசலின் போது, முகக்கவசம் அணிவது அவர்களுக்குப் பாதுகாப்பானது என்பதனால், அதனை அணியுமாறு ஊக்குவிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

சிலாங்கூர் சிஐடி போலீஸ் அதிகாரி மர்ம மரணம் - ஷா ஆலம் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்ததாக சந்தேகம்

சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மலேசியர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் / இஸ்ரேலிய படையினரிடம் மலேசியா வலியுறுத்தல்

அரசாங்க சுகாதார நிலையத்தில் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது எப்படி? - சுகாதாரத்துறை விளக்கம்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது


