ஹரி ராயா பொருநாளின் விடுமுறைக்குப் பிறகு, பள்ளி அமர்வுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட வேளையில், இன்னும் அதிகமான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது வருத்தத்தை அளிப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை, ஜொகூர், மாசாய், தாமான் மோலேக்கில் உள்ள பள்ளிப் பகுதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெரும்பாலான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் எழும் என்ற அச்சத்தின் காரணமாக, முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என்றாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முகக்கவசம் அணிவது அவசியமாகும் என்று கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, கல்வி அமைச்சு பரிந்துரைச்செய்தது.
அதே வேளையில், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கை போன்ற கூட்ட நெரிசலின் போது, முகக்கவசம் அணிவது அவர்களுக்குப் பாதுகாப்பானது என்பதனால், அதனை அணியுமாறு ஊக்குவிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

Related News

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்


