கோலாலம்பூர், ஜூன்.05-
தெனாகா நேஷனல் பெர்ஹாட்டான டிஎன்பி, வெளியிட்டதைத் போல் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வரும் மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான அட்டவணை, போலியானது என்று அந்த மின்சார விநியோக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
டிஎன்பி முத்திரைச் சின்னத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த போலி அட்டவணையைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று அது அறிவுறுத்தியது.
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான எந்தவோர் அட்டவணையையும் தாங்கள் வெளியிடவில்லை என்று டிஎன்பி ஓர் அறிக்கையின் வழி விளக்கம் அளித்துள்ளது.








