Jul 6, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநில அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுவதற்கு இனி அனுமதியில்லை: ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுவதற்கு இனி அனுமதியில்லை: ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அறிவிப்பு

Share:

ஈப்போ, ஜூன்.05-

பேரா மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுப்படுவதற்கு அனுமதி கேட்டு, விண்ணப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் அறிவித்துள்ளார்.

வரக்கூடிய அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்தகைய அனுமதி வழங்கப்படாது என்பதில் பேரா மாநில அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பேரா மாநில சுகாதார, ஒற்றுமை மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பேரா மாநில நில மற்றும் கனிம வள இயக்குநரின் சுற்றறிக்கையின் வாயிலாக இவ்விவகாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய கோவில்களுக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் மாநில அரசாங்கம் அங்கீகரிக்காது.

அப்படி யாராவது புதிய கோவிலை நிர்மாணிக்க விரும்பினால் அதற்கான நிலத்தை அவர்களே சொந்தமாக வாங்க வேண்டும். அந்த கோவிலை நிர்மாணிப்பதாக இருந்தாலும் கூட, அவர்கள் ஊராட்சி மன்றத்தின் அனுமதியை முதலில் பெற்றாக வேண்டும்.

ஆனால், அரசாங்க நிலத்தில் புதிய கோவில்களுக்கு இனி இடமில்லை என்று சிவநேசன் அறிவித்துள்ளார்.

இன்று ஈப்போவில் ஸ்ரீ பேராக் கட்டடத்தில் இந்து விவகாரங்களுக்கான நடவடிக்கைக் குழு கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

பாஸ் கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்