பெட்டாலிங் ஜெயா, ஜூன்.05-
உள்ளூரைச் சேர்ந்த பிரபல பாடகரும், நடிகருமான ஆடவர் ஒருவர், 17 வயது பெண்ணிடம் பாலியல் பலவந்தம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாபார் தெரிவித்தார்.
அந்த நடிகருக்கு எதிராக அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பணியிடத்தில் வேலை செய்யும் அந்த இளம் பெண்ணை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அந்த நடிகர், பாலியல் பலவந்தம் புரிந்ததாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








