Feb 1, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூச விழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆன்மிகம்

ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூச விழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

Share:

ஈப்போ, பிப்ரவரி.01-

ஈப்போ கல்லுமலை, அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா, பக்தர்களின் வெள்ளத்தில் களைகட்டியது. நீண்ட விடுமுறையை முன்னிட்டுப் பல மாநிலங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்தித் தங்களின் காணிக்கையைச் செலுத்தினர்.

இவ்விழாவிற்கு பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் , துணை அமைச்சர் எம் . குலசேகரன் உட்பட பலர் வருகை புரிந்தனர்.

இவர்களுக்கு ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா நிர்வாகஸ்தர்கள் மரியாதை வழங்கிய பின்னர் டத்தோ அ. சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

பேரா மாநிலத்தில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா கொண்டாப்படுகிறது.

இதில் ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது என்பதுடன் பெரும் திரளாக பக்தர்கள் கலத்து கொண்டனர்.

இந்த ஆண்டு கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட்டும் , பேராவில் கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசம் கொண்டாட்டப்படும் இரண்டாவது பெரிய ஆலயமாக விளங்கும் அருள் மிகு கம்போங் கப்பாயாங் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்குவதாகவும் சிவநேசன் அறிவித்தார்.

மேலும் பேசிய அவர் பீடோரில் உள்ள முருகன் ஆலயத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

பேரா மாநில அரசு, இம்மாநிலத்தில் செயல் பட்டு வரும் ஆலயங்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் அதே வேளையில் நிலப்பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் டத்தோ சிவநேசன் உறுதி அளித்தார்.

Related News

பினாங்கு தைப்பூச விழாவில் ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை முதலமைச்சர் அறிவித்தார்

பினாங்கு தைப்பூச விழாவில் ஸ்ரீ பாலதெண்டாயுதபாணி ஆலயத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை முதலமைச்சர் அறிவித்தார்

கோலா சிலாங்கூர் ஆலயத்திற்கு நிதியுதவி: தைப்பூச விழாவில் வீ. பாப்பாராய்டு பங்கேற்பு

கோலா சிலாங்கூர் ஆலயத்திற்கு நிதியுதவி: தைப்பூச விழாவில் வீ. பாப்பாராய்டு பங்கேற்பு

பத்துமலையில் விரைவில் மின் படிக்கட்டுத் திட்டம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி

பத்துமலையில் விரைவில் மின் படிக்கட்டுத் திட்டம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி

பினாங்கில் தைப்பூசப் பெருவிழா: பக்தி பரவசத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பினாங்கில் தைப்பூசப் பெருவிழா: பக்தி பரவசத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பத்துமலை திருத்தலம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது: டான்ஸ்ரீ ஆர். நடராஜா பெருமிதம்

பத்துமலை திருத்தலம் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது: டான்ஸ்ரீ ஆர். நடராஜா பெருமிதம்

பினாங்கு மாநகர் மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம், பினாங்கு போலீஸ் தலைவர் விளக்கம்

பினாங்கு மாநகர் மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம், பினாங்கு போலீஸ் தலைவர் விளக்கம்