Jan 17, 2026
Thisaigal NewsYouTube
மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்
ஆன்மிகம்

மகா இராஜராஜேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

Share:

சிரம்பான், மே 17-

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபர் பகுதியில் நெடுங்காலமாக வீற்றிருந்து, தன்னை நாடி வருகின்ற அடியவர்களுக்கு அருள்மழை பொழிகின்ற இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் மற்றும் திருப்பள்ளியறை சுவாமிகளுக்கான மகா கும்பாபிஷேகம் வரும் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.01 க்கும் 11.01 க்கும் இடைப்பட்ட நேரத்தில் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் தமிழ் திருமுறையில் இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகில் மிக சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார அஷ்ட கால வைரவர் இரண்டு இடங்களில் மட்டுமே வீற்றிருக்கிறார். ஒன்று, தமிழ்நாடு திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திலும், மற்றொன்று, மலேசியாவில் சிரம்பான் தாமான் துவாங்கு ஜாபர் இராஜ ராஜேஸ்வரர் ஆலயத்திலும் குடிகொண்டு இருக்கிறார்.

இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு, மகா .இராஜராஜேஸ்வரர் பெருமான் திருவருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகம் சார்பில் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு