Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா

Share:

ஸ்கூடாய், மார்ச்.01-

ஜோகூர், ஸ்கூடாய், ஜாலான் கெமிலாங் உத்தாமா, தாமான் புகிட் கெமிலாங்கில் வீற்றிருக்கும் அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி உற்வசம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பக்த பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ அஷ்ட சிவ லிங்கேஸ்வரர் அருளாசியைப் பெற்றனர்.

பிற்பகல் 3.30 மணிக்கு ரத்ர ஹோமம், மகா அபிஷேகம், தீபாரதனை, வசந்த மண்டப பூஜை மற்றும் அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள், ஆனந்தன் சிவாச்சாரியார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இரவு 7.31 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜைக்கான யாகம், 108 சிவலிங்க கலச குடம் எடுத்தல் மற்றும் அபிஷேகம் ஆராதணை நடைபெற்றது.

அதன் பின்னர் இரண்டாம் கால பூஜை இரவு மணி 11.30 க்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 2.30 மணிக்கும், நான்காம் கால பூஜை காலை 4.30 மணிக்கும் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, சிவராத்தி நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய நன்கொடையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலயத் தலைவர் சத்திய மூர்த்தி முனியாண்டி ஆலய நிர்வாகக் குழு சார்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மறுநாள் வியாழக்கிழமை, இரத ஊர்வலம் மற்றும் பொன்னூஞ்சல் நிகழ்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி