Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி திருவிழா

Share:

ஸ்கூடாய், மார்ச்.01-

ஜோகூர், ஸ்கூடாய், ஜாலான் கெமிலாங் உத்தாமா, தாமான் புகிட் கெமிலாங்கில் வீற்றிருக்கும் அருள்மிகு அஷ்ட சிவ லிங்கேஸ்வர ஆலயத்தில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி உற்வசம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பக்த பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ அஷ்ட சிவ லிங்கேஸ்வரர் அருளாசியைப் பெற்றனர்.

பிற்பகல் 3.30 மணிக்கு ரத்ர ஹோமம், மகா அபிஷேகம், தீபாரதனை, வசந்த மண்டப பூஜை மற்றும் அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள், ஆனந்தன் சிவாச்சாரியார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இரவு 7.31 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜைக்கான யாகம், 108 சிவலிங்க கலச குடம் எடுத்தல் மற்றும் அபிஷேகம் ஆராதணை நடைபெற்றது.

அதன் பின்னர் இரண்டாம் கால பூஜை இரவு மணி 11.30 க்கும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 2.30 மணிக்கும், நான்காம் கால பூஜை காலை 4.30 மணிக்கும் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, சிவராத்தி நிகழ்விற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய நன்கொடையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலயத் தலைவர் சத்திய மூர்த்தி முனியாண்டி ஆலய நிர்வாகக் குழு சார்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மறுநாள் வியாழக்கிழமை, இரத ஊர்வலம் மற்றும் பொன்னூஞ்சல் நிகழ்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு