Jun 5, 2026
Thisaigal NewsYouTube
இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை
ஆன்மிகம்

இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை

Share:

சிரம்பான்,செப்டம்பர் 05-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 8.00 க்கு சிரம்பான், துவாங்கு ஜாபர் - ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசி உரை நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் அவர்கள், சிறப்பு வருகை புரிந்து, திருமுறை அருளாசி உரை நிகழ்த்தவிருக்கிறார்.

நேற்று மலேசியா வந்து சேர்ந்த அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள், இன்று காலையில் ஆலயத்திற்கு வருகை புரிந்து, நிகழ்விற்கான ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தார். ஏற்பாடுகள் குறித்து ஆலய நிர்வாகத்தினர், சுவாமிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தொடங்கும் சுவாமிகளின் அருளாசி உரை நிகழ்விலும், அதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் நிந்திய பூஜை மற்றும் விஷேச பூஜைகளிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, மெய்ப்பொருளின் தெளிவுரையையும், அருளாசியையும் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி