Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை
ஆன்மிகம்

இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை

Share:

சிரம்பான்,செப்டம்பர் 05-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணி 8.00 க்கு சிரம்பான், துவாங்கு ஜாபர் - ரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசி உரை நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள் அவர்கள், சிறப்பு வருகை புரிந்து, திருமுறை அருளாசி உரை நிகழ்த்தவிருக்கிறார்.

நேற்று மலேசியா வந்து சேர்ந்த அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள், இன்று காலையில் ஆலயத்திற்கு வருகை புரிந்து, நிகழ்விற்கான ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தார். ஏற்பாடுகள் குறித்து ஆலய நிர்வாகத்தினர், சுவாமிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தொடங்கும் சுவாமிகளின் அருளாசி உரை நிகழ்விலும், அதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் நிந்திய பூஜை மற்றும் விஷேச பூஜைகளிலும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, மெய்ப்பொருளின் தெளிவுரையையும், அருளாசியையும் பெற்று இன்புறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் திருமுறை அருளாசியுரை | Thisaigal News