செனாவாங், பிப்ரவரி.14-
நெகிரி செம்பிலான், செனாவாங், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு நடைபெறுவதை முன்னிட்டு நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.31 மணிக்கு சிவபுராணம் பாராயண நிகழ்வு ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

திருக்கயிலாயப் பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனத்தின் ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் திருத்தலைமையில், பக்திப் பெருக்குடன் சிவபுராணப் பக்திப் பெருக்குடன் சிவபுராணப் பாராயண நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்தப் புனிதமான பாராயண நிகழ்வில் பக்த பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.








