ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-
20 ஆண்டுகளுக்கு பிறகு பினாங்கு தைப்பூச விழாவில் பங்கு கொண்டது மனநிறைவு அளிக்கிறது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பினாங்கு மாநில இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பினாங்கு தைப்பூசத்தை காண்பதில் மன மகிழ்ச்சி அளிப்பதாக பினாங்கு தண்ணீர் மலை தைப்பூச விழாவில் அமைக்கப்பட்ட அரச மலேசிய போலீஸ் படையின் தண்ணீர் பந்தலுக்கு வருகை புரிந்த டத்தோ கருணாநிதி, திசைகளுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
தைப்பூசத்தை கொண்டாடும் மலேசிய இந்துக்களுக்கு டத்தோ கருணாநிதி தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.








