Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
ஆன்மிகம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

Share:

சிரம்பான், ஜூலை.07-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நேற்றைய விழாவில் இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையான மஹிமாவின் தலைவரும், கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ என். சிவகுமார் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவிற்குத் தலைமையேற்று வழி நடத்தி வரும் தமிழகம், திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், தேவஸ்தானம் சார்பில் டத்தோ சிவகுமாருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, தலைப்பாகைக் கிரீடம் அணிவித்து சிறப்புச் செய்தார்.

தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவையொட்டி, இன்று திங்கட்கிழமை காலையில் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பிச்சாண்டீஸ்வரர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

உலகத்துக்கு படியளக்கக்கூடிய பிச்சாண்டீஸ்வரர் பெருமான் வீதி உலா எழுந்தருளினார். இன்று மாலையில் திருக்கல்யாண உற்சவத்துடன் மங்களம் தரக்கூடிய திருக்கல்யாண விழா, வெகுச் சிறப்பாக நடைபெறவிருகிறது.

இந்த திருக்கல்யாண உற்சவ விழாவில் பக்தப் பெருமக்கள், அடியார்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு, ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் அருளாசியைப்ப் பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொள்கிறது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு