Jan 17, 2026
Thisaigal NewsYouTube
காவடிச் சடங்குப் பயிற்சிப் பட்டறை
ஆன்மிகம்

காவடிச் சடங்குப் பயிற்சிப் பட்டறை

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.27-

காவடி எடுக்கும் பக்தர்கள் ஆகம சாத்திரத்தின்படி சரியான முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் காவடிச் சடங்குப் பயிற்சிப் பட்டறை ஒன்றை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெற்றிகரமாக நடத்தியது. இந்த முயற்சி ஆன்மீக ஒழுக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு பொதுவான புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என அவ்வாரியம் குறிப்பிட்டது. .

இந்தப் பட்டறையுடன் இணைந்து, காவடிச் சடங்குடன் தொடர்புடைய மதத்திற்குப் புறம்பான அல்லது பொருத்தமற்ற செயல்களைக் கையாள்வதற்கும் தடுப்பதற்கும் ஒரு சிறப்பு பணிக் குழுவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்து மரபில் மிகவும் மதிக்கப்படும் சடங்குகளில் ஒன்றின் புனிதத்தைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது.

பினாங்கு இந்து மதத்தின் முக்கிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் இவ்வாரியம் தொடர்ந்து உறுதியாக உள்ளது. அனைத்து இந்துக்களிடையேயும் இந்து அமைப்புகளிடையேயும் ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், சரியான மத நடைமுறைகளைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தங்களின் தெளிவான நோக்கமாகும் என அவ்வாரியம் மேலும் கூறியது. கூட்டு முயற்சியால், மத நம்பிக்கையும் பழக்க வழக்கங்களும் தலைமுறை தலைமுறையாக மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தப் பாடுபடுவதாகவும் அவ்வாரியம் குறிப்பிட்டது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு