Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது
ஆன்மிகம்

ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

Share:

சென்னை, மே.03-

செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப் பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, இன்று சனிக்கிழமை காலையில் சென்னை, கட்டாங்குளத்தூர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

தமிழகம் உட்பட மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிசர்லாந்து, மொரிசியஸ் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தருமை ஆதினம் 27- ஆவது குருமகா சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

மலேசியாவிலிருந்து 62 பேர் கொண்ட பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று மாநாட்டில் கலந்து கொண்டுள்ள கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, மாநாட்டின் தொடக்க நாளான இன்று காலை 11.45 மணிக்கு சைவ சித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.

டான்ஸ்ரீ நடராஜாவுடன் அவரின் துணைவியார் புவான்ஸ்ரீ மல்லிகா, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ R. S. தனேந்திரன் உட்பட மலேசிய பிரமுகர்கள் பலர், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்துள்ளனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு