Jun 5, 2026
Thisaigal NewsYouTube
சைவ சமயக் கல்லூரிக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும்
ஆன்மிகம்

சைவ சமயக் கல்லூரிக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும்

Share:

கெர்லிங் , ஆகஸ்ட் 20-

மலேசிய சைவ சமயப் பேரவையும் சைவத் திருக்கோயில் கலைக் கல்வி அறவாரியமும் இணைந்து மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் செயல்படித்திவரும் சைவத் திருக்கோயில் சைவ சமயக் கல்லூரிக்கான திட்டத்தின் அடிக்கல்நாட்டு விழா நேற்று பிற்பகல் மணி 2.30 க்கு சைவ ஆகமங்கள் நெறிகளின்படி திருமுறை ஓதப்பட்டு நடைபெற்றது.

கெர்லிங் பட்டணத்தின் அருகே, தஞ்சோங் மாலிம் செல்லும் வழியில் உள்ள நிலம் ஒன்றில் நடைபெற்ற அந்த அடிக்கல்நாட்டு விழாவிற்கு, ஒன்பது பேர் கொண்ட அறங்காவலர் குழு, அறவாரிய உறுப்பினர் நூறு பேர் நானூறு சித்தாந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வருகை தந்துள்ளனர்.

மனை சீரமைப்பு பணிகளும் கட்டுமானப் பணிகளும் விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஐம்பது மில்லியன் பெருமானமுள்ள இந்த திட்டத்தின் முதற் பகுதியில் சிவன் கோயில், திருமண மண்டபம், தியான மண்டபம், பணியாளர் குடியிருப்பு ஆகியவை நிர்மாணிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டப்படும் அந்த சமய கல்லூரியில் சமய ஆசிரியர் , கோயில் பூசகர், திருமுறை ஓதுவார், தென்னிந்திய சமயங்களின் தத்துவத்துறைகள் போன்ற அனைத்து துறைகளுக்கான பயிற்சிகளும் கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெறும் திட்டத்திற்காக நன்கொடை வழங்க விரும்புவர்கள் PUBLIC BANK, YAYASAN FALSAFAH DAN INSTITUSI SAIVA என்ற வங்க கணக்கின் 3208616019 என்ற வங்கி எண்ணின் வழி வழங்கலாம்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி