கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. பிசிசிஐ மூலமாக நடத்தப்படும் இந்த தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், கடந்த 2022-ம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிமுகமானது. இந்த அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டு வந்தார். அணியில் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து கம்பீர் விலகினார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே ஆலோசராக நியமிக்கப்பட்டுள்ள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கவுதம் கம்பீர் 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.