13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய ரசிகர் ஒருவரின் பதிவிற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முற்றிலும் நம்பமுடியாத உலகக் கோப்பையை நடத்தியதற்காக இந்தியாவுக்கு முதலில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தொடர்களில் எடுக்கப்பட்ட முயற்சி மிகப்பெரியது.