ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே, மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி டான் மற்றும் திணா முரளிதரன் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறினர்.
டோக்கியோ மெட்ரோபொலிட்டன் ஜிம்னாசியத்தில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான முதல் சுற்றுப் போட்டியில், மலேசிய ஜோடி தங்கள் எதிரிகளான சீன ஜோடியிடம் மூன்று செட்கள் வரை போராடியது. இருப்பினும், இறுதிவரை தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைக்கத் தவறிய பேர்லி - திணா, 21-18, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தனர்.
தொடர்ச்சியான பின்னடைவு சர்வதேச பேட்மிண்டன் களத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ள பேர்லி - திணா ஜோடி, இந்தத் தொடரில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கியது. ஆனால், தொடக்கச் சுற்றிலேயே சீன ஜோடியிடம் ஏற்பட்ட இந்தத் தோல்வி மலேசிய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தத் தொடரில் மலேசியாவின் மற்ற பிரிவுகளில் வீரர்கள் போராடி வரும் நிலையில், முன்னணி ஜோடியின் இந்த வெளியேற்றம் மலேசியப் பதக்க வாய்ப்பிற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.








