May 3, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!
உலகச் செய்திகள்

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

Share:

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி மாணவி ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட போதிலும், மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து வருகின்றனர்.

Related News