அமெரிக்காவுடன் போர் பதற்றத்தை குறைக்கும் அல்லது போர் நிறுத்தம் செய்யும் முன்மொழிவுகளை ஈரான் தலைவர் அயதுல்லா மொஜ்தாபா கமேனி நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இரு இடைநிலை நாடுகள் மூலம் மத்தியஸ்த்தம் செய்யும் இம்முயற்சிகளை கமேனி மறுத்ததுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பழிவாங்கும் நிலைப்பாட்டில், கடுமையாகவும் உறுதியாகவும் இருப்பதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கமேனியின் முதல் வெளிநாட்டு கொள்கை ஆலோசனை கூட்டத்தில் இந்த நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்தக் கூட்டத்தில் அவர் நேரடியாக கலந்து கொண்டாரா? என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது மூன்றாவது வாரத்தில் நீடித்து வருகிறது.
அப்போரில், இதுவரை குறைந்தது 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விரைவில் முடிவடையும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.








