கடுமையான போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனை வழங்கும் சிங்கப்பூர் சட்டத்திற்கு, அந்நாட்டு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்த நிலைப்பாடு, நாட்டில் போதைப்பொருள் குற்றங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதை காட்டுவதாக சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் குற்றங்களுக்கான சிங்கப்பூரின் தண்டனைகள் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள கே. சண்முகம், அவர்களில் 87 விழுக்காட்டினர், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
2023-ஆம் ஆண்டில் இந்த விகிதமானது 77 விழுக்காடு மட்டுமே இருந்தது.
இந்த பொதுமக்கள் கருத்தாய்வானது கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன், அதன் புதுப்பிக்கப்பட்ட முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.








