சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து பாத்தாம் தீவிற்குச் செல்லும் படகுப் பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு 6 வெள்ளி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என படகுச் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வார இறுதி நாட்களில் பாத்தாம் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் சுமையாக அமையும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்துமா என்பது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








