தமிழகம், மே.17-
விஜய் முதல்வராவதைத் தடுத்து நிறுத்தி, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க, தாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு, தரங்கெட்ட ஆள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
இன்று காலை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமது நண்பரான மு.க.ஸ்டாலின் தோல்வியுற்றது தன்னை மிகவும் கவலையடையச் செய்த காரணத்தினால், அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, விஜய் முதல்வராவதைத் தடுக்க தாம் முயற்சி செய்வதாகப் பரவிய வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், தமக்கும் விஜய்க்கும் வயது வித்தியாசத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் இடைவெளி இருந்தாலும் கூட, அவருக்கு எக்ஸ் தளத்தில் தாம் வாழ்த்து கூறியதாகவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் அரசியலிலேயே இல்லாத போது விஜய் மீது ஏன் பொறாமை வரப் போகிறது? என்றும் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே வேளையில், தவெக தொண்டர்கள் விஜயைப் பாதிக்கும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும், மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ரஜினிகாந்த் விவரித்துள்ளார்.








