கோலாலம்பூர், மார்ச்.06-
மலேசிய அதிகாரிகளின் உதவியுடன், வங்காள தேச நாட்டவர் ஒருவரை, மலேசியாவில் கைது செய்துள்ள அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப்பிஐ அந்நபரை நாடு கடத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வரும், 28 வயதான ஸோபைடுல் அமீன் என்ற அந்நபர், சர்வதேச குழந்தைகள் பாலியல் சுரண்டல் நிறுவனத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
ஸோபைடுல், நேற்று மலேசியாவிலிருந்து அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், இன்று பிற்பகல் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்ய உதவிய மலேசிய அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் படேல் நன்றியும் தெரிவித்துள்ளார்.








