Oct 16, 2025
Thisaigal NewsYouTube
தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி
உலகச் செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் பலி

Share:

ஜொகன்னஸ்பெர்க், அக்டோபர்.13-

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகர் அருகே நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்து மலை பகுதிகளுக்கு அருகே சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில், தலைகுப்புற பேருந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் ஆவர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related News

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர... | Thisaigal News