உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொது நிதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும், அதிகரித்து வரும் உலகளாவிய கடன் பாதிப்புகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பின் தலைவர்கள் கூட்டாக உறுதியளித்துள்ளனர். பிரான்சின் ஏவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் சுமைகள், அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு நிதியளிப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் அரசாங்கங்களுக்கு இருக்கும் திறனைக் கட்டுப்படுத்துவதாக தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, வலுவான சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்தியும் முதலீடுகளை ஈர்க்க முடியாமல் தவிக்கும் வளரும் நாடுகளுக்கும், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் கூடுதல் ஆதரவை வழங்குமாறு இந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்கவும், நிதி அணுகலை மேம்படுத்தவும் பன்முக வளர்ச்சி வங்கிகள் இடர் பகிர்வு வழிமுறைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.








