பூனைகளின் இறைச்சிக்காக அவை கடத்தப்பட்டு விற்கப்படும் பாரிய கும்பல் ஒன்றின் நடமாட்டத்தை காவல்துறையினர் முறியடித்து, சுமார் 400 உயிருள்ள பூனைகளை மீட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனையின் போது மேலும் 80 பூனைகள் ஏற்கனவே இறந்து பனிக்கட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக தெற்கு வியட்நாம் முழுவதும் பூனைகளைக் கவர்ந்திழுத்து பொறிவைத்து பிடித்து வந்த இந்தக் குற்றவியல் கும்பல் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் புகார்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில், மீட்கப்பட்ட பூனைகளில் 40-க்கும் மேற்பட்ட பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. வியட்நாமில் நாய் மற்றும் பூனை இறைச்சி சட்டப்பூர்வமானது என்றாலும், அவற்றின் ஆதாரச் சான்றிதழ்களை விற்பனையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். எனினும், கடத்தப்பட்ட பூனைகள் அடைந்த துயரங்கள் மற்றும் பாதிப்புகள் காரணமாக மீட்கப்பட்டவற்றில் சுமார் 100 பூனைகள் பின்னர் உயிரிழந்ததாக விலங்கு நல அமைப்பு தெரிவித்துள்ளது.








