சிங்கப்பூர்: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, நான்கு முக்கிய சாலைப் பகுதிகளில் மின்னியல் சாலைக் கட்டணங்களை உயர்த்துவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபகாலமாக சில குறிப்பிட்ட நேரங்களில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கவனித்த ஆணையம், இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, CTE, KPE மற்றும் PIE ஆகிய விரைவுச் சாலைகளின் குறிப்பிட்ட நுழைவாயில்களில் காலை நேரக் கட்டணம் ஒரு வெள்ளி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு வரும் மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. மற்ற இடங்களில் தற்போதைய கட்டணங்களே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








