Jul 15, 2026
Thisaigal NewsYouTube
அகதிகள் விவகாரத்தில் உலகத் தலைவர்களுக்குப் போப் லியோ XIV வலுவான செய்தி: இத்தாலியின் லம்பேடுசா தீவிற்குத் நேரில் சென்று ஆதரவு!
உலகச் செய்திகள்

அகதிகள் விவகாரத்தில் உலகத் தலைவர்களுக்குப் போப் லியோ XIV வலுவான செய்தி: இத்தாலியின் லம்பேடுசா தீவிற்குத் நேரில் சென்று ஆதரவு!

Share:

ஆப்பிரிக்காவில் இருந்து ஆபத்தான கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிகளுக்கு ஆதரவாகப் போப் லியோ XIV குரல் கொடுத்துள்ளார். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினமான ஜூலை 4 அன்று, அவர் இத்தாலியின் லம்பேடுசா தீவிற்கு ஒரு நாள் பயணமாக வருகை தந்து, அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து உலகத் தலைவர்களுக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் அகதிகளைக் காவலில் வைப்பதற்கும், நாடுகடத்துவதற்கும் புதிய கடுமையான விதிகளை அனுமதித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தப் பயணம் அமைந்துள்ளது.

அமெரிக்காவில் பிறந்து கத்தோலிக்க திருச்சபையின் போப் ஆகப் பொறுப்பேற்றுள்ள அவர், ஆரம்பம் முதலே அகதிகளின் பாதுகாப்பைத் தனது முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளார். லம்பேடுசா தீவில் அடையாளம் தெரியாத அகதிகள் புதைக்கப்பட்டுள்ள கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்த அவர், பின்னர் அகதிகளுக்கான நினைவிடத்தைப் பார்வையிட்டு ஒரு புலம் பெயர்ந்த குடும்பத்துடன் கலந்துரையாடினார். மத்திய தரைக்கடல் பகுதி உலகின் மிக ஆபத்தான அகதிகள் பயணப் பாதையாகக் கருதப்படும் வேளையில், அகதிகளின் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான குடியேற்றப் பாதைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

பேங்காக் தீ விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு; உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

பேங்காக் தீ விபத்து: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு; உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

பாரிஸ் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க வனப்பகுதியில் காட்டுத்தீ: 1,300 ஹெக்டேர் நிலம் சாம்பல்

பாரிஸ் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க வனப்பகுதியில் காட்டுத்தீ: 1,300 ஹெக்டேர் நிலம் சாம்பல்

படையப்பா நீலாம்பரி ரேஞ்ச் பழிவாங்கல்: உலகக்கோப்பை கனவைக் கலைத்த "வகுப்பறை வில்லன்"!

படையப்பா நீலாம்பரி ரேஞ்ச் பழிவாங்கல்: உலகக்கோப்பை கனவைக் கலைத்த "வகுப்பறை வில்லன்"!

மூன்றாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: இன்னும் சமரசம் சாத்தியமே என்கிறார் டிரம்ப்!

மூன்றாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: இன்னும் சமரசம் சாத்தியமே என்கிறார் டிரம்ப்!

சட்டவிரோத கருத்துக்கணிப்பு விவகாரம்: தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை!

சட்டவிரோத கருத்துக்கணிப்பு விவகாரம்: தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை!