நேற்று புதன்கிழமை ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதலால் தாய்லாந்து நாட்டுக் கப்பல் சேதமடைந்த சம்பவம் தொடர்பாக, ஈரான் மன்னிப்பு கோர வேண்டும் என்று தாய்லாந்து வலியுறுத்தியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதலால், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, பணியாளர்கள் அனைவரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஈரான் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அக்கப்பலானது, ஈரானிய போராளிகளால் சுடப்பட்டதாக ஈரானின் புரட்சி காவல்படை தெரிவித்துள்ளது.








